கலங்கத் தேவையில்லை தோழர்களே!
மொத்த இந்தியாவின் எதிர்காலத்திற்கான செய்தி நம்மிடம்தான் இருக்கிறது.
மோடி வரும் போதெல்லாம் கருப்பும், சிவப்பும், நீலமுமாய் திரண்டு ’வெளியே போ’ என்று சொன்ன தமிழகம் இன்றைக்கும் அதையேச் சொல்லி இருக்கிறது.
தொடர்ந்து தீரத்துடன் போராடிய தமிழ் மண் இன்று வென்று காட்டியிருக்கிறது.
இந்த நம்பிக்கையை ஏந்தி நிற்போம்.
ஒரு துளி காற்றை சுவாசித்து, சுழன்றடிக்கும் பெரும் காற்றையே எதிர்த்து பறக்கும் சின்னஞ்சிறு குருவிகளின் சித்தத்தையும், துணிவையும், வலிமையையும் கைக்கொள்வோம்.
காலம் நமக்கானது.